Friday, May 20, 2011

அழுதிட ஜீவனற்று போய் இருக்கும்
என் இதயத்திற்கு ஆறுதல் சொல்லிட
உன் ஒருவனை தவிர வேறு யாரும் இல்லையாட
இந்த பூமியில்.
உன் உறவு எனக்கு வசந்த கால
சாரல் மழை போன்றது.
உன்னிடம் பேசாமல் இருக்கும் தருணங்களில்
துடிதுடித்து போகும் என் இதயம்.
எதற்கு இந்த சாபம்.
புரியாத புதிர் போன்று என் வாழ்வு
உன்னால் மட்டுமே என் வாழ்வில்
ஒளி வரும் என்று நம்பிக்கை வாழ்கிறேன்.

Thursday, February 10, 2011

விதைத்தாலும் முளைக்காது என்று தெரிந்தும்
உங்கள் மனம் என்னும் நிலத்தில் என் காதல் விதையாய்
விதைத்தேன். அது முளைத்து பாதியில் கருகி விட்டதுடா.
அழுகிற என் கண்களுக்கு ஆயுள் குறைவு தான் என் கண்ணா.
நார்யோடு இணையாத பூவை போல என் வாழ்வும் உதிர்ந்து விட்டதுடா.