Monday, September 20, 2010


கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன்
என் உயிரோடு நீங்கள் கலந்திருந்தால் உங்களை பிரிவது எப்படி.

விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில்
விடாமல் துடிக்கும் உங்கள் நினைவுகள்.

Friday, September 17, 2010


அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.

தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.


Wednesday, September 15, 2010


என் விடியல்
என்றும்
உனக்கானது...

நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...

காதலாகி கசிந்துருகி
இருந்த நாட்கள்
கனவாய் ஆகிப்போனது எனக்கு..
அன்பும் காதலும் கரைந்ததால்
கண்ணீரில் கரைகின்றன நாட்கள்....

மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..


Saturday, August 7, 2010

உதிர்ந்த கொண்டிருக்கிறது காலங்கள்.
உளமாற நேசித்தவளான உன்னை
உதாசின படுத்தின என்னை
எள்ளி நகையாடுகிறது என் தனிமை...

வாழ்க்கையின் பிடிப்பை
படிப்பிதவள் நீ

Sunday, March 14, 2010

மறுக்கிறேன்
கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக.

Monday, March 8, 2010


கடைசி பயணம்

கல்லறைத் தோட்டத்தில்
கானல் பறவைப் போல்
காத்து கிடைக்கிறேன்
எனது கடைசி நாளை எண்ணி.

Saturday, February 13, 2010

கானல் நீர்
புல் மீது பனித்துளிப் போல்
பூவின் மீது தேன்துளிப் போல்
நான் உன் மீது கொண்ட காதல்
கானல் நீர் போல்
என்னவனோ உன் மௌனத்தால்.

Tuesday, January 19, 2010


ஹைக்கூ

பூவில் கூட விதவை!
வெள்ளை ரோஜா

Sunday, January 17, 2010

தாலாட்டு மாறி போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண்பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
பெண் மானே செந்தேனே யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம் எந்நாளும் ஏனென்று கேட்கிறாய்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு
சுகமாயிரு
கண்ணீரில் சந்தோஷம் நானிங்கு பார்க்கிறேன்
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்
உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே
இது போதுமே

Monday, January 11, 2010





கண்களாக நீங்கள்
கண்ணீராக நான் !!
தெரியாமல் கூட
அழுது விட வேண்டாம்.
நான் உங்களை பிரிந்து விடுவேன்.

Saturday, January 2, 2010


நினைவுகள்

பாதைகள் வேறு ஆனாலும் பயணங்கள் ஒன்று.
அது போல நம் மனங்கள் வேறு ஆனாலும்
அதில் நம் நினைவுகள் ஒன்று.