ஊமை காதல்
திங்கள் என்று உன்னை
நினைத்தேன் .
ஆனால் நீ ஞாயிறு ஆக மாறி
என்னை வாட்டுகிறாய்.
என் மனம் புரிவில்லையா இன்னும் உனக்கு
அதில் எழும் அலைகடல் போல
உன் நினைவின் சங்கமம்.
பட்டு போன இதயத்தில்
பசுமையான கொடி போல நீ
வேர் விட
என் இதய பூக்கள் பூக்க
அழகிய தோட்டம்
என் வீடு.
பல கோடி மனிதர்கள் இருக்கும் இடத்தில்
உன்னை மட்டும் அடையாளம்
காண்கிறாள்.
ஏன் என்றால் நீ அவளின் சுவாசம்.
பன்னீர் வாசனை தான்!
ஆனால் எத்தனை
பேருக்கு தெரியும்
அது ரோஜாவின்
கண்ணீர் என்று...!
மகுடம்
புயலிலும்
சாயாமல் நிமிர்ந்து
நிற்கும் புற்களும்
இயற்கை வைத்த
வைர மகுடங்களாய்
பனித்துளி !