Tuesday, February 7, 2012

நம்மில் தோன்றிய காதலுக்கு நீங்கள் கொடுத்த 
உங்கள் மௌனம் என்ற பரிசு.
உங்கள் தோளில் சாய்ந்திட ஆசை
ஆனால் தோற்று விட்டேன் இன்று. 
எண்ண ஏட்டில் எழுதி வைத்த
வண்ண வண்ண காதல் கோலங்கள் 
இன்று கரைந்த போன மாயம் என்ன.

S.K கண்மணி 

 

Friday, May 20, 2011

அழுதிட ஜீவனற்று போய் இருக்கும்
என் இதயத்திற்கு ஆறுதல் சொல்லிட
உன் ஒருவனை தவிர வேறு யாரும் இல்லையாட
இந்த பூமியில்.
உன் உறவு எனக்கு வசந்த கால
சாரல் மழை போன்றது.
உன்னிடம் பேசாமல் இருக்கும் தருணங்களில்
துடிதுடித்து போகும் என் இதயம்.
எதற்கு இந்த சாபம்.
புரியாத புதிர் போன்று என் வாழ்வு
உன்னால் மட்டுமே என் வாழ்வில்
ஒளி வரும் என்று நம்பிக்கை வாழ்கிறேன்.

Thursday, February 10, 2011

விதைத்தாலும் முளைக்காது என்று தெரிந்தும்
உங்கள் மனம் என்னும் நிலத்தில் என் காதல் விதையாய்
விதைத்தேன். அது முளைத்து பாதியில் கருகி விட்டதுடா.
அழுகிற என் கண்களுக்கு ஆயுள் குறைவு தான் என் கண்ணா.
நார்யோடு இணையாத பூவை போல என் வாழ்வும் உதிர்ந்து விட்டதுடா.

Monday, September 20, 2010


கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன்
என் உயிரோடு நீங்கள் கலந்திருந்தால் உங்களை பிரிவது எப்படி.

விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்தில்
விடாமல் துடிக்கும் உங்கள் நினைவுகள்.

Friday, September 17, 2010


அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.

தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.


Wednesday, September 15, 2010


என் விடியல்
என்றும்
உனக்கானது...

நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...

காதலாகி கசிந்துருகி
இருந்த நாட்கள்
கனவாய் ஆகிப்போனது எனக்கு..
அன்பும் காதலும் கரைந்ததால்
கண்ணீரில் கரைகின்றன நாட்கள்....

மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..


Saturday, August 7, 2010

உதிர்ந்த கொண்டிருக்கிறது காலங்கள்.
உளமாற நேசித்தவளான உன்னை
உதாசின படுத்தின என்னை
எள்ளி நகையாடுகிறது என் தனிமை...

வாழ்க்கையின் பிடிப்பை
படிப்பிதவள் நீ