
என் விடியல்
என்றும்
உனக்கானது...
நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...
காதலாகி கசிந்துருகி
இருந்த நாட்கள்
கனவாய் ஆகிப்போனது எனக்கு..
அன்பும் காதலும் கரைந்ததால்
கண்ணீரில் கரைகின்றன நாட்கள்....
மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..

wonderful... superb lines.. keep it up pons... continue this do leave u r talent.
ReplyDeletevery nice poem i like this one
ReplyDelete